Home இலங்கை இலங்கை பயங்கரவாதத்தை தைரியமாக எதிர்நோக்கியது – பாகிஸ்தான்

இலங்கை பயங்கரவாதத்தை தைரியமாக எதிர்நோக்கியது – பாகிஸ்தான்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை பயங்கரவாதத்தை தைரியமாக எதிர்நோக்கியது என பாகிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் {ஹசைன் ( Mamnoon Hussain   ) இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க, தற்பொழுது பாகிஸ்தானுக்கு பயணம் செய்துள்ள நிலையில் அவர் பாகிஸ்தான் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மிகச் சிறந்த உறவுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ள பாகிஸ்தான் ஜனாதிபதி பயங்கரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இரு நாடுகளுக்கும் இடையில் வலுவான உறவுகள் காணப்படுதாகத் தெரிவித்துள்ளார். பயங்கரவாத அச்சுறுத்தலின் போது இலங்கை மிகுந்த தைரியத்துடன் செயற்பட்டமை வரவேற்கப்பட வேண்டியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More