Home இலங்கை ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய முடியாது என்ற கருத்துக்கே இடமில்லை – எம்.ஏ சுமந்திரன்

ஆனந்த சுதாகரனை விடுதலை செய்ய முடியாது என்ற கருத்துக்கே இடமில்லை – எம்.ஏ சுமந்திரன்

by admin

அரசியல்கைதி ஆனந்த சுதாகரனை ஜனாதிபதி பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்ய முடியும் எனவும் அவரை விடுதலை செய்ய முடியாது என்ற கருத்துக்கே இடமில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஆனந்த சுதாகரன்புத்தாண்டு தினத்தில் விடுவிக்கப்படுவார் என ஜனாதிபதி தெரிவித்திருந்தும் விடுவிக்கப்படவில்லை. தற்போது வெசாக் தினத்திற்கு முன்னர் விடுவிக்க வேண்டுமென பல தரப்பினரும் அழுத்தங்கள் கொடுத்து வருகின்றனர்.
ஆனந்த சுதாகரனின் விடுதலை ஜனாதிபதி சம்பந்தப்பட்ட விடயம். அவர் வழக்கின் தீர்ப்பிற்கு பின்னர் தண்டனை அனுபவிக்கும் கைதி என்பதனால் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் மட்டுமே தான் விடுதலை செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனந்த சுதாகரனை விடுவிக்க , தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளதா என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே எம்.ஏ சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். கடந்த வாரம் ஜனாதிபதியுடன் தான் தொலைபேசியில் உரையாடிய போது, அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற தனது கருத்தில் மாற்றம் இல்லை என ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமன்றி பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் உள்ளவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாகவும் எம். சுமந்திரன் தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் கூறப்பட்ட காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருந்தாலும் கூட, ஜனாதிபதியைக் கொண்டு இவற்றினைச் செய்து முடிக்க வேண்டும். அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் விதிவிலக்கு கிடையாது. ஆகையினால், இவர்களின் விடுதலை தொடர்பாகவும் முன்னைய ஜனாதிபதியுடன் பேசியுள்ளேன் எனவும் தெரிவித்தார்

மேலும் வெசாக் தினம் முடிந்த பின்னர் தம்முடன் பேசுவதாக ஜனாதிபதி வாக்குறுதி அளித்துள்ளார் எனவும் ; எம். சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Siva July 9, 2018 - 10:34 am

வெசாக் முடிந்து இற்றைக்கு, ஏறக்குறைய இரண்டு மாதங்கள்
போய் விட்டனவே! திரு. சுமந்திரனின் கூற்றுப்படி, நீதிமன்ற
விசாரணைகள் முடிந்து சிறைத் தண்டனை அனுபவிக்கும்
கைதி ஒருவரை ஜனாதிபதியால் விடுவிக்க முடியுமென்றால்,

ஜனாதிபதி புதிதாக, ‘ஆனந்தசுதாகரனை
உரிய நீதிமன்றத் செயற்பாடுகளுக்கமைய மாத்திரமே விடுதலை
செய்ய முடியும்’, என்று புதுக் கதை அளக்கின்றாரே!

ஆக, காலம் கடத்தும் படலம் எல்லா மட்டங்களிலும்
கனகச்சிதமாக அரங்கேற்றப்படுகின்றன, என்பதே உண்மை!

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More