Home இலங்கை 70 வயதான வயோதிப பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர் கைது…

70 வயதான வயோதிப பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியவர் கைது…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

70 வயதான வயோதிப பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 43 வயதான நபரை தாம் நேற்று கைதுசெய்ததாக முந்தல் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். மதுரங்குளி வேலுசுமனபுர பிரதேசத்தில் நேற்று மதியம் 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் என்பதுடன் கணவரை இழந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர். பிள்ளைகள் திருமணம் செய்து வேறு பகுதிகளில் வசித்து வருவதால், வயோதிப பெண் தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார்.

சம்பவம் நடந்த போது மதுபோதையில் பெண்ணின் வீட்டுக்கு வந்த சந்தேக நபர் முதலில் பெண்ணை தாக்கியுள்ளதுடன் பின்னர் அவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

சந்தேக நபர் அதே பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் திருமணமான அவருக்கு ஒரு பிள்ளை இருப்பதுடன் மனைவி பிரிந்து சென்றுள்ளார். அதிகமாக மது அருந்தி இருந்ததால், இந்த குற்றத்தை சந்தேக நபர் செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்மணி மருத்துவப் பரிசோதனைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More