73
இந்தியாவிற்கு தங்கம் கடத்துவதற்கு முயற்சித்த நான்கு பேரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். விமான நிலையத்தின் சுங்கப் பிரிவினர் இந்த நான்கு பேரையும் கைது செய்துள்ளனர்.
சுமார் ஒன்றரை கிலோ கிராம் எடையுடைய தங்கம் இவ்வாறு கடத்தப்பட்டுள்ளது. இந்த தங்கத்தின் சந்தைப் பெறுமதி சுமார் 8.9 மில்லியன் ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் பெண்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
Spread the love