Home இலங்கை 2ஆம் இணைப்பு – இலங்கையின் புதிய அமைச்சரவை…

2ஆம் இணைப்பு – இலங்கையின் புதிய அமைச்சரவை…

by admin


புதிய அமைச்சரவை நியமனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

புதிய அமைச்சரவை மாற்றங்களின் படி புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு,

 

லக்‌ஷ்மன் கிரியெல்ல – அரச தொழில்முயற்சி அபிவிருத்தி மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர்

சரத் அமுனுகம – விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி மற்றும் மலைநாட்டு பாரம்பரிய அமைச்சர்

எஸ். பி. நாவின்ன – உள்நாட்டு அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி அமைச்சர்

மஹிந்த அமரவீர – விவசாயத்துறை அமைச்சர்

துமிந்த திசாநாயக்க – நீர்ப்பாசனம் மற்றும் நீர்வள முகாமைத்துவம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்

பி. ஹெரிசன் – சமூக வலுவூட்டல் அமைச்சர்

கபீர் ஹாஷிம் – அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர்

ரஞ்சித் மத்தும பண்டார – பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர்

தலதா அத்துகோரல – நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்

பைஸர் முஸ்தபா – விளையாட்டுத்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர்

விஜித விஜயமுனி சொய்சா – கடற்றொழில் மற்றும் நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சர்

டி.எம் சுவாமிநாதன் – புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய விவகார அமைச்சர்

சாகல ரத்னாயக்க – திட்ட முகாமைத்துவம், இளைஞர் விவகாரங்கள் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர்

மனோ கணேசன் – தேசிய கலந்துரையாடல், நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர்

தயா கமகே – சமூக நலம் மற்றும் ஆரம்ப தொழிற்முயற்சி அமைச்சர்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா – நிலையான அபிவிருத்தி, வனவிலங்கு மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர்

ரவீந்திர சமரவீர – தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர்

விஜேதாஸ ராஜபக்ச – உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய அமைச்சரவை இன்றைய தினம் பதவிப் பிரமாணம் :
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புதிய அமைச்சரவை இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தருமாறு அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ள பாராளுமன்ற உறுப்பினர்ளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானபூர்வ அடிப்படையில் இம்முறை அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்களின் எண்ணிக்கை 43 ஆக வரையறுக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த அமைச்சரவையில் காணப்பட்ட சில பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அமைச்சுக்களின் துறைகள் சரியான முறையில் பங்கிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் செயலாளரும், பிரதமரின் செயலாளரும் இந்த அமைச்சரவை துறைசார் பங்கீட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

அண்மையில் பதவி விலகிய சுதந்திரக் கட்சி அமைச்சர்களின் பதவிகளில் சில ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, இன்றைய தினம் அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சர்கள் மட்டும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் எனவும், பிரதி மற்றும் ராஜாங்க அமைச்சர்கள் பெரும்பாலும் நாளைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களுக்கும் பிரதி அமைச்சு மற்றும் ராஜாங்க அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட உள்ளன.

இதேவேளை புதிய அமைச்சரவை மாற்றத்தின் போது சமூர்த்தி அமைச்சு ஐக்கிய தேசியக்கட்சிக்கும், கலாசார அமைச்சு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிதி மோசடி சம்பவம் ஒன்று காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து விலகிய அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு புதிய அமைச்சரவையில் அமைச்சர் பதவியை வழங்குவதில்லை என்ற கடுமையான நிலைப்பாட்டில் ஜனாதிபதி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More