இலங்கை பிரதான செய்திகள்

2005ல் மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்களிடம்  கேள்வி கேட்க யாருக்காவது துணிவிருக்கா….

“இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என கூறவில்லை எதிரி மாற்றம் தேவை என்றே நாங்கள் சொன்னோம் – பத்திரிகைகள் பொய்யை எழுதுகின்றன”    –  குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என நான் எப்போதும் கூறியதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு ” தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும், அவை பயணிக்க வேண்டிய திசையும்” எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

நான் ஒரு போதும் இந்த அரசாங்கத்தை நல்லாட்சி அரசாங்கம் என சொல்லவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் ஒரு பிரமை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அவரசமாக எதிரி மாற்றம் தேவை என்றே நாங்கள் மேடை மேடையாக சொன்னோம். எங்களுக்கு அவசரமாக எதிரி மாற்றம் தேவையாக இருந்தது. வீடு பற்றி எரிகிறது வீட்டுக்குள் இருப்பவர்கள் எழும்பி வெளியே ஓட வேண்டும் என கேட்கின்றார்கள் அதான் அந்த தேர்தல். ஓட வேண்டாம் எரிகிற வீட்டினுள் இருந்து சாகுங்கள் என்பது தான் தேர்தலை பகிஸ்கரிக்க கோரியவர்களின் கோரிக்கை.  அப்படி செத்தால் தான் இன வழிப்புக்கு மேலும் கூடுதல் ஆதாரம் கிடைக்கும் என நம்பினார்கள்.

இந்த அரசாங்கத்தை கொண்டு வந்ததற்கு பல விமர்சனங்கள் உண்டு அவை அனைனத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். சொன்ன எதனையும் அரசாங்கம் செய்யவில்லை. ஆனால் 2005ஆம் ஆண்டு மஹிந்தவை ஆட்சிக்கு கொண்டுவந்தவர்கள் ? தொடர்பில்  கேள்வியை கேட்க யாருகாவது துணிவிருக்கா? அதனை விட மோசமான காரியமா நாங்கள் செய்துள்ளோம் ? நாங்கள் சொல்லும் உண்மையை வெளியில் சொல்லுங்கள். சொல்லாததை சொல்லாதீர்கள். என தெரிவித்தார்.

பத்திரிகைகள் பொய்யை எழுதுகின்றன. – சுமந்திரன் குற்ற சாட்டு

பத்திரிகைகள் தங்கள் வியாபரத்திற்காக பொய்களை எழுதுகின்றார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.உதயன் பத்திரிகையின் வேட்கை நிகழ்வில் கலந்து கொண்டு ” தமிழ் ஊடகங்களின் சொல் நெறியும் , அவை பயணிக்க வேண்டிய திசையும்” எனும் தொனிப்பொருளில் சிறப்புரை ஆற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் , அரசியல்வாதிகள் வாக்குகளுக்காக பொய் பேசுபவர்கள் அது உண்மை பொய் பேசாவிட்டால் விமர்சிக்கபடுவார்கள். அதே போல பத்திரிகைகள் வியாபராத்திற்காக பொய்யை எழுதுகின்றார்கள். மக்களின் காதுக்கு இனிமையாக இருக்கும் விடயங்களை சொன்னால் தான் பத்திரிகைகளை விற்பனை செய்யமுடியும். என தெரிவித்தார்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.