Home இந்தியா அசாமில் புறக்காவல் நிலையம் அருகே ஐ.எஸ். இயக்கத்தின் கொடி போன்ற தோற்றத்தில் கொடிகள் :

அசாமில் புறக்காவல் நிலையம் அருகே ஐ.எஸ். இயக்கத்தின் கொடி போன்ற தோற்றத்தில் கொடிகள் :

by admin

அசாமில் புறக்காவல் நிலையம் அருகே ஐ.எஸ். இயக்கத்தின் கொடி போன்ற தோற்றத்தில் கொடிகள் காணப்பட்டுள்ளன. ஐ.எஸ். அமைப்பு, தனது இயக்கத்திற்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆட்களை சேர்த்து வருகிறது. இதனால் இந்தியாவில் அந்த அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளதுடன் அதன் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டு வருவதுடன் ஐ.எஸ். இயக்கத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அசாம் மாநிலம் கோல்புரா நகரில் பிரம்மபுத்திரா நதிக்கரையோரம் உள்ள ஒரு மரத்தில் ஐ.எஸ். இயக்கத்தின் கொடிகள் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்த கொடிகளில் ஐ.எஸ். என்றும், வடகிழக்கு மாநிலங்களைக் குறிக்கும் வகையில் என்.இ. என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றை கைப்பற்றிய காவல்துறையனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேவேளை அந்தக் கொடி ஐ.எஸ். கொடியை ஒத்திருக்கவில்லை எனவும் தாங்கள் கைப்பற்றிய கறுப்புக் கொடிகளில் ஐ.எஸ். என கையால் வரையப்பட்டுள்ளது எடினவும் உருது அல்லது அரபு எழுத்துக்கள் அதில் காணப்படுகின்றன எனவும் . சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More