Home இலங்கை கீத் நொயார் கடத்தல் – தேவையாயின் பொன்சேகாவிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளுங்கள்…

கீத் நொயார் கடத்தல் – தேவையாயின் பொன்சேகாவிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளுங்கள்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

நேஷன் பத்திரிகையில் இணையாசிரியாராக பணியாற்றி சிரேஷ்ட ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்திச் செல்லப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அன்றைய இராணுவ தளபதி சரத் பொன்சேகாவிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளவில்லை எனில், தேவைப்படுமாயின் அவரது வாக்குமூலங்களை பெற்று விசாரணைகளை நடத்துமாறு கல்கிஸ்சை நீதவான் லோச்சனா அபேவிக்ரம நேற்று குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஊடகவியலாளர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் அன்றைய இராணுவ தளபதி சரத் பொன்சேகா மீதே குற்றம் சுமத்தப்படுவதால், அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என குற்றம் சுமத்தப்பட்ட தரப்பின் சட்டத்தரணிகள் நேற்று நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் இதற்கு பதிலளித்த விசாரணை அதிகாரிகள் சரத் பொன்சேகாவிடம் ஏற்கனவே வாக்குமூலங்களை பெற்று விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பொன்சேகாவிடம் வாக்குமூலங்களை பெற்றது போதாது என்பதால், அவர் தொடர்பிலும் விசாரணைகளை நடத்துமாறு உத்தரவிடுமாறு குற்றம் சுமத்தப்பட்ட தரப்பின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதற்கு அமைய மேற்படி உத்தரவை பிறப்பித்த நீதவான் விசாரணைகளின் முன்னேற்றத்தை அடுத்த வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வழக்கின் சந்தேக நபரான ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகரவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More