Home இலங்கை நாட்டில் அரசில் சூழ்ச்சியே உள்ளது – அர்ஜுன ரணதுங்க

நாட்டில் அரசில் சூழ்ச்சியே உள்ளது – அர்ஜுன ரணதுங்க

by admin

நாட்டில் அரசியல் ஸ்திரமாக இல்லை மற்றும் அரசில் சூழ்ச்சியே காணப்படுகின்றது என்று பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் இன்று இடம்பெற்ற(03) பிக்குமமார்களுக்கான தானம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் நிகழ்வின் நிறைவில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே இதனை தெரிவித்தார்.

எமது நாட்டில் அரசியல் ஸ்திரமாக இல்லை, தேர்தலில் வெற்றி பெறமுடியாத சில தலைவர்கள் அரசாங்கத்தை ஸ்திரமற்ற தன்மைக்கு மாற்ற பல சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பல வழிகளில் முயற்ச்சி செய்கின்றனர்.

ஆனால் கடந்த காலத்தில் அரசியலில் பல விடயங்கள் இடம்பெற்றன.  அவற்றை அதிகார ஆசைக் கொண்டவர்களே செய்தார்கள்.  மக்களால் தேர்தலில் வெற்றிபெற முடியாத, பணத்தைக் கொண்டு வெல்ல முடியும் என்று நினைக்கும் சில நபர்களே இந்த அரசாங்கத்தை கவிழ்க்க பல முயற்;சிகளை மேற்கொள்கின்றனர்.  சில ரேஸ் புகி, ஊழல் வாதிகள் ஒன்றிணைந்து நடத்திய அழிவில் நாட்டின் பொருளாதார முதலீடு பாதிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திற்கு தெரிவாகி பதவிகளை பெற்ற சில அரசியல் வாதிகள் நாட்டை சீரழித்துள்ளனர் எனவும் நாட்டை பற்றி யோசிக்கும் அரசியல் தலைவர்கள்; இதுபோன்ற வேலைகளை செய்யமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்

மேலும் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்தாலோசித்தே அமைச்சரவை மாற்றத்ததை செய்துள்ளனர். இருக்கின்ற 18 மாதங்கள் இந்த அரசாங்கத்திற்கு ஒரு முக்கியமான காலப்பகுதியாகும். ஆகவே நாம் கடந்தகாலத்தில் விட்ட தவறுகளை சரிசெய்து முன்னோக்கிச் செல்வதையே எதிர்பார்க்கின்றோம் எனவும் தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More