மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து வடக்கு மாகாண சபையினர் நாளைமறுதினம் திங்கட்கிழமை ஆராயவுள்ளனர்.
கைதடியிலுள்ள முதலமைச்ச ரின் அமைச்சில் இன்று இது தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதெனவும் மாகாண சபையின் அவைத் தலைவர், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த சில வருடங்களாக வடக்கு மாகாண சபையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஏற்பாடு செய்து நடத்திவருகிறது. வழமைபோன்று இந்த முறையும் அது தொடர்பில் ஒழுங்குகளை மேற்கொள்ள இந்தக் கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒருமித்து ஒரே இடத்தில் நினைவுகூர வேண்டும் என்று யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Add Comment