Home இந்தியா அப்பா எங்கே? எனக் கேட்ட கஸ்தூரி! நீட் பரீட்சை எழுத மகனை கேரளாவுக்கு அழைத்துச் சென்ற தந்தை மரணம்!

அப்பா எங்கே? எனக் கேட்ட கஸ்தூரி! நீட் பரீட்சை எழுத மகனை கேரளாவுக்கு அழைத்துச் சென்ற தந்தை மரணம்!

by admin


நீட் பரீட்சைக்காக மகனுடன் கேரள மாநிலம் எர்ணாகுளம் சென்ற தமிழகம் திருவாரூரை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்துள்ள நிகழ்வு இந்தியாவின் நீட் பரீட்சை வீமான விமர்சனத்தை மேலும் வலுவாக்கியுள்ளது.

இந்தியா முழுவதும் நீட் பரீட்சை நடைபெற்றது. இதற்காக திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டியை சேர்ந்த கஸ்தூரி மகாலிங்கம் என்ற மாணவனுக்கு கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பரீட்சை நிலையம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதற்காக நேற்றே மகாலிங்கம் தனது தந்தை கிருஷ்ணசாமியுடன் சென்றுள்ளார்.

இன்று காலை தேர்வெழுத மகாலிங்கம் சென்றுவிட்ட நிலையில், விடுதியில் இருந்த கிருஷ்ணசாமி மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்துள்ளார். தந்தை மரணமடைந்தது தெரியாமல் மகாலிங்கம் பரீட்சை எழுதிய நிகழ்வு அனைவரையும் பெரும் நெகிழ்வுக்கு உள்ளாக்கியது.

இதனையடுத்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக மாணவனின் தந்தை உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் எர்ணாகுளம் சிட்டி ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்த கிருஷ்ணசாமியின் உடல் அவரது மைத்துனர் அன்பரசன் என்பவரிடம் இன்று  ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நீட் பரீட்சை எழுத மகனை அழைத்துச் சென்ற தந்தை உயிரற்ற உடலை திரும்புவது கிருஷ்ணசாமியின் மனைவி பிள்ளைகளை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அத்துடன் நீட் பரீட்சைக்கு எதிராக பல்வேறு தமிழகத்தில் இருந்த எதிர்ப்பு தற்போது மேலும் வலுவடைந்துள்ளது. இந்த மரணம் தமிழகத்தில் பெரும் பரபரப்பு சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More