Home இந்தியா ஆப்கானிஸ்தானில் 7 இந்திய பொறியாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் 7 இந்திய பொறியாளர்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

by admin


ஆப்கானிஸ்தானில் மின் உற்பத்தி நிலையத்தில் பணியாற்றி வந்த 7 இந்திய பொறியாளர்களை தீவிரவாதிகள் கடத்திச் சென்றுள்ள நிலையில் அவர்களை மீட்க அந்நாட்டு அரசும், இந்திய வெளியுறவு அமைச்சகமும் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் சில பகுதிகள் இன்னமும் தலிபான் மற்றும் ஐஎஸ் பயங்கரவாதிகள் பிடியில் உள்ளநிலையில் அங்கு நடைபெறும் புனரமைப்பு பணிகளில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்தவகையில் அங்கு அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களில் இந்தியாவை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களில் சிலர் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருக்கும் போது ஆப்கானிஸ்தானை சேர்ந்த சாரதியையும் இந்தியாவை சேர்ந்த 7 பொறியாளர்களை அவர்கள் வாகனத்துடன் கடத்திச் சென்றுள்ளனர். இந்தியர்கள் கடத்தப்பட்ட தகவலை இந்திய தூதரக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளதுடன் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை அந்நாட்டு அரசும், இந்திய வெளியுறவு அமைச்சகமும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More