Home இலங்கை சுரேஸ் பிறேமச்சந்திரன் இரணைதீவு மக்களுக்கு கிடுகு வழங்கியுள்ளார் :

சுரேஸ் பிறேமச்சந்திரன் இரணைதீவு மக்களுக்கு கிடுகு வழங்கியுள்ளார் :

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பூநகரி இரணைதீவு மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரனின் வழிகாட்டுதலில் கிடுகுகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் பூநகரி இரணைதீவில் இராணுவ ஆக்கிரமிப்பை எதிர்த்து குடியேறிய மக்களுக்கான அடிப்படை வசதிகள் எதனையும் அரசாங்கம் வழங்காத நிலையில் அந்த மக்களை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சந்தித்த சுரேஸ் பிறேமச்சந்திரன் அவர்கள் புலம்பெயர்ந்த மக்களின் உதவியுடன ஒரு தொகுதி உணவுப்பொருட்களை; வழங்கியிருந்தார்.

உணவுப்பொருட்களை வழங்கும் போது இரணை தீவு மக்கள் தமக்கு குடிசைகள் அமைப்பதற்கு கிடுகுகளை பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். மக்களின் கோரிக்கைக்கு அமைவாக ,இன்று தற்காலிக குடில்களை அமைப்பதற்காக 5000 மட்டை கிடுகுகள் முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாகவும் 5000 கிடுகுகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இன்று மக்களுக்கு வழங்கப்பட்ட கிடுகுகளுக்கான நிதி அனுசரணையை புலம்பெயர் தமிழ் அமைப்பான உறவுகளுக்கு கைகொடுப்போம் என்ற அமைப்பு வழங்கியிருந்து.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More