Home இலங்கை மே 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­கா­லில், தமிழினம் ஓரணியில் திரள வேண்டும்!!

மே 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­கா­லில், தமிழினம் ஓரணியில் திரள வேண்டும்!!

by admin

முள்­ளி­வாய்­க்கால் என்­பது இறு­திப் போரில் பெருந்­தொ­கை­யான தமிழ் உற­வு­கள் அரச படை­க­ளின் கண்­மூ­டித்­த­ன­மான தாக்­கு­தல்­க­ளில் ஈவி­ரக்­க­மின்றிக் கொல்­லப்­பட்ட மண். தமிழ் உற­வு­கள் பலர் காணா­மல் ஆக்­கப்­பட்ட மண். தமி­ழி­னத்­தின் விடு­த­லைக்­காக எமது உற­வு­கள் தீக்­கு­ளித்த மண். விடு­த­லைக் கன­வு­டன் ஆயி­ர­மா­யி­ரம் வேங்­கை­க­ளும் தமிழ் மக்­க­ளும் தங்­க­ளின் உயிர்களை ஆகு­தி­யாக்­கிய மண்.

மே 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­கா­லில் தமி­ழி­னம் ஓர­ணி­யில் திர­ள­வேண்­டும். முள்­ளி­வாய்க்­கால் நினை­வா­ல­யத்­தில் வடக்கு மாகாண சபை­யின் ஏற்­பாட்­டில் நடை­பெ­ற­வுள்ள நினை­வேந்­தல் நிகழ்­வில் தமிழ் மக்­கள், பொது அமைப்­பு­கள், அர­சி­யல் கட்­சி­கள் என்று அனைத்­துத் தரப்­பும் ஒற்­று­மை­யு­டன் ஒன்று திரண்டு உயிர்­நீத்த எமது உற­வு­களை சுடர் ஏற்றி – அஞ்­சலி செலுத்தி நினைவுகூரவேண்டும் என  தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் கோரியுள்ளார்.

ஈழத் தமி­ழர் வாழ்­நா­ளில் கறுப்பு நாளான – செங்­கு­ருதி தோய்ந்த மிகப்­பெ­ரிய துயர்­ப­டிந்த நாளான – மாபெ­ரும் மனி­தப் படு­கொலை நடந்த நாளான மே 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­கால் நினை­வா­ல­யத்­தில் நினை­வேந்­தல் நிகழ்வை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஆளு­கைக்­குட்­பட்ட வடக்கு மாகாண சபை நடத்­த­வுள்­ளது. இந்த நிலை­யி­லேயே, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

இறு­திப் போரில் அரச படை­க­ளின் பல­வி­த­மான தாக்­கு­தல்­க­ளி­னால் எமது உற­வு­கள் பலர் சாக­டிக்­கப்­பட்­ட­னர். சாட்­சி­யங்­கள் எது­வு­மின்றி பன்­னாட்டு போர்­வி­தி­க­ளுக்கு முர­ணாக இறு­திப் போர் நடை­பெற்­றது.

மகிந்த ஆட்­சி­யில் தமி­ழர்­கள் மீது நடத்­தப்­பட்ட இந்­தத் திட்­ட­மிட்ட கொடூ­ரத் தாக்­கு­தல்­கள் தொடர்­பில் அப்­போது நான் நாடா­ளு­மன்­றில் பல உரை­களை ஆற்­றி­யி­ருந்­தேன். போரை உடன் நிறுத்தும்படி  ஆட்­சி­யில் இருந்த அர­சைக் கேட்­டி­ருந்­தேன். ஆனால், தமிழ் மக்­க­ளுக்­குப் பெரிய இழப்­பு­க­ளைக் கொடுத்­துத்­தான் அரசு போரை முடி­வுக்­குக் கொண்டு வந்­தது.

இத­னால் பெருந்­தொ­கை­யான தமிழ் மக்­கள் கொல்­லப்­பட்­ட­னர் பலர் காணா­மற் ஆக்­கப்­பட்­ட­னர். எமது மக்­க­ளின் சொந்த வீடு­கள், சொத்­து­கள் அழிக்­கப்­பட்­டன. பாதிக்­கப்­பட்ட எமது மக்­க­ளுக்கு நீதி­யைப் பெற்­றுத்­த­ரு­மாறு பன்­னாட்­டுச் சமூ­கத்தை இன்று நாம் கோரி நிற்­கின்­றோம். தமி­ழின அழிப்பு தின­மா­க­வும், தமிழ்த் தேசிய துக்க நாளா­க­வும் மே 18ஆம் திகதி அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண சபை­யின் ஏற்­பாட்­டில் எதிர்­வ­ரும் 18ஆம் திகதி முள்­ளி­வாய்க்­கால் நினை­வா­ல­யத்­தில் நடை­பெ­ற­வுள்ள நினை­வேந்­தல் நிகழ்­வில் தமிழ் மக்­கள், பொது அமைப்­பு­கள், அர­சி­யல் கட்­சி­கள் என்று அனைத்­துத் தரப்­பும் ஒற்­று­மை­யு­டன் ஓர­ணி­யில் திரண்டு பங்­கேற்க வேண்­டும். இறு­திப் போரில் இழந்த எமது உற­வு­களை சுடர் ஏற்றி அஞ்­சலி செலுத்தி நினை­வு­கூர வேண்­டும். இவ்­வாறு நாம் செய்­வ­தன் ஊடாக போரின்­போது உயி­ரி­ழந்த எமது உற­வு­க­ளின் ஆத்மா சாந்­தி­ய­டை­யும்  என சுட்டிக்காட்டியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More