Home இலங்கை மக்களின் பிரச்சினைகளுக்கு பதிலாக தங்களின் பிரச்சனைகளை கலந்துரையாடுகின்றனர்..

மக்களின் பிரச்சினைகளுக்கு பதிலாக தங்களின் பிரச்சனைகளை கலந்துரையாடுகின்றனர்..

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களின் பிரச்சினைகளுக்கு பதிலாக அவர்களின் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடி வருவதாக எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். சைட்டம் மாணவர், பெற்றோர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் சிலர், நேற்று எல்லே குணவங்சவை சந்திக்க சென்றிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன் போது எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிக்க போகிறீர்கள் என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த குணவங்ச தேரர், தன்னிடம் 5 கோரிக்கைகள் இருப்பதாகவும் அந்த கோரிக்கைகளை கண்டி தலதா மாளிகையில் உள்ள புத்தரின் புனித தந்தத்தின் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளும் நபருக்கு தான் ஆதரவு வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More