Home இலங்கை இரணைத்தீவுக்கு சென்ற முதலமைச்சர் தலைமையிலான குழு

இரணைத்தீவுக்கு சென்ற முதலமைச்சர் தலைமையிலான குழு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் இரணைத்தீவு மக்களை இன்று(14) சென்று சந்தித்துள்ளனர் . கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் உள்ள இரணைத்தீவு மக்கள் தங்களின் சொந்த நிலத்திற்கு செல்ல வேண்டும் என வலியுறுத்தி கடந்த வருடம் மே மாதம் முதலாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் 359 ஆவது நாள் வரை எவ்வி தீர்வும் இன்றி தொடர்ந்த நிலையில் பொறுமையிழந்த மக்கள் தாங்களாகவே தங்களின் சொந்த நிலமான இரணைத்தீவுக்குச் சென்று குடியேறினர்.

இதனை தொடர்ந்து பல அரசியல்வாதிகளும் நிலம்மீட்ட போராளிகளாக விளங்கிய இரணைத்தீவு மக்களை சென்று பார்வையிட்டு வந்த நிலையில் இன்று( 14-05-2018) வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி. விக்கினேஸ்வரன் மற்றும் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன், முன்னாள் வடக்கு விவசாய அமைச்சர் ஜங்கரநேசன், மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் உள்ளிட்டவர்கள் சென்று மக்களை சந்தித்துள்ளனர்

1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை காரணமாக இரணைத்தீவில் இருந்து வெளியேறிய மக்கள் இரணைமாதாநகர் கிராமத்தில் வசித்து வந்தனர். இவர்கள் தங்களின் பூர்வீக நிலத்தை விட்டு வெளியேறிய நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் நெருக்கடிக்குள் வாழ்ந்து வந்த சூழ்நிலையில் கடந்த வருடம் மே மாதம் முதலாம் சொந்த நிலத்திற்கு செல்வதற்கான போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இந்த போராட்டத்திற்கு எவ்வித தீர்வும் கிடைக்காத நிலையில் அந்த மக்கள் தாங்களாகவே தங்களின் நிலத்திற்கு சென்று நெருக்கடிகளுக்கு மத்தியில் குடியேறினார்கள். என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More