Home இலங்கை இரணைத்தீவு மக்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்தார் முதலமைச்சர்

இரணைத்தீவு மக்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்தார் முதலமைச்சர்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இரணைத்தீவுக்கு இன்று ( 14) சென்ற வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் அங்கு தங்கியுள்ள 80 குடும்பங்களுக்கு உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்தனர். கடந்த மாதம் 23 ஆம் திகதி தங்களின் போராட்டத்தின் 359 நாளில் இரணைமாதாநகரிலிருந்து மீன் பிடி படகுகளில் சொந்த நிலமான இரணைத்தீவுக்குச் சென்று குடியேறினார்கள். மக்கள் தாங்களாகவே தங்களின் சொந்த நிலத்தில் சென்று குடியேறிய நிகழ்வினை தொடர்ந்து அவர்களை சந்திக்க பலதரப்பட்ட அரசியல் தரப்பினர்களும் இரணைத்தீவுக்கு படையெடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய(14) தினம் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழுவினர் சென்று மக்களை சந்தித்ததோடு அவர்களுக்கான உலருணவுப் பொருட்களையும் வழங்கி வைத்தனர். ஒரு குடும்பத்திற்கு 2499 வீதம் 80 குடும்பங்களுக்கு  உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More