Home இலங்கை குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு அஞ்சலி

குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு அஞ்சலி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நெடுந்தீவு துறைமுகப் பகுதியில் அமைந்துள்ள குமுதினிப் படகு படுகொலை நினைவுத் தூபிக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து 64 பயணிகளுடன் குமுதினி படகு தனது பயணத்தை வழமை போல ஆரம்பித்தது. படகு அரை மணி நேரம் தனது பயணத்தை மேற்கொண்டிருந்தவேளை கடற்படையால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என 36 பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட துயரம் நிறைந்த 33 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

இதனை நினைவு கூரும் முகமாக நெடுந்தீவு துறைமுக பகுதியில் அமைந்துள்ள நினைவு தூபி முன்பாக நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன. குறித்த நிகழ்வில் வடமாகாண மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் , வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம் , விந்தன் கனகரட்னம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூபி அஞ்சலி செலுத்தினர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More