Home இலங்கை பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…

பயங்கரவாதத்தை கட்விழ்த்த பயங்கரமானவர் தற்போது மறு பிறவி எடுத்த குழந்தைபோல் பேசுகிறார்…

by admin


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவும், அவரது சகோதர்களும் நாட்டில் உள்ள அனைத்தையும் கொள்ளையடித்ததுடன், வெள்ளை வான் கலாசாரத்தை கொண்டுவந்து ஊடகவியலாளர் பலரின் கடத்தல் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டமைக்கு காரணமாக இருந்தனர் என அமைச்சர் மங்கள சமரவீர குற்றம்சாட்டி உள்ளார்.

அவர் வெளியிட்ட விசேட அறிக்கையில், மஹிந்தவும் அவரது உறவினர்களும் கொண்டுவந்த வெள்ளை வான் கலாச்சாரத்தின் ஊடாக, பயங்கரவாதத்தை கட்டவிழ்த்துவிட்டதால் உலகளாவிய ரீதியில் இருந்து இலங்கை தனிமைப்படுத்தப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, இலங்கை வரலாற்றில் நியமிக்கப்பட்ட, மிக மோசமான மற்றும் ஆபத்தான அரசாங்க அதிகாரி எனக் கருதப்படும், மகிந்தவின் சகோதரரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான கோத்தாபய ராஜபக்ஷ பல மோசடிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், அவை தொடர்பிலான வழக்கு விசாரணைகளில், அதற்கான போதிய ஆதாரங்கள் கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அன்று பல ஊழல்களில் ஈடுபட்ட மகிந்த சகோதரர்கள், தற்போது உள்ள ஆட்சியாளர்களை ஊழல் செய்வதாக விமர்சித்து வருவதுடன், கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது மறு பிறப்பெடுத்த குழந்தை போன்று பேசுவது வேடிக்கையான விடையம் எனவும், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More