Home இலங்கை வடமாகாண மருத்துவர்களின் கொடுப்பனவு பிரச்சனைக்கு தீர்வு – இழுத்தடிப்புக்கள் மேற்கொள்ளப்படுமெனின் தொடர் வேலை நிறுத்தம்

வடமாகாண மருத்துவர்களின் கொடுப்பனவு பிரச்சனைக்கு தீர்வு – இழுத்தடிப்புக்கள் மேற்கொள்ளப்படுமெனின் தொடர் வேலை நிறுத்தம்

by admin

வடமாகாண மருத்துவர்களின் கொடுப்பனவுகள் ஏனைய மாகாணங்களில் வழங்கப்பட்டபோதும் வட மாகாண அதிகாரிகளின் வினைத்திறனற்ற செயற்பாடுகளால் தமக்கு கிடைக்கவில்லை என வடமாகாண அரச மருத்துவர்கள் கடந்தவாரம் அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டிருந்தனர் . அவர்கள் தமது கொடுப்பனவை ஏலவே ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து ஏனைய மாகாணங்கள் வழங்கியதுபோல வழங்குமாறும் ,குறையை நிரப்புவதற்க்காக மேலதிக கோரிக்கையினை திறைசேரியிடம் சமர்ப்பித்து குறையை ஈடு செய்யுமாறும் கோரி இருந்தனர்.

எனினும் அக்கோரிக்கை நிதிப் பிரமாணங்கள் விளங்காமல் விடப்பட்ட கோரிக்கை என மாகாணசபை அதிகாரிகளால் நிராகரிக்கப் பட்டு இருந்தது. அதனைத்தொடர்ந்து ஒருநாள் அடையாள பணிப் பகிஸ்கரிப்பை வைத்தியர்கள் மேற்கொண்டிருந்தனர். எனினும் தற்போது மத்திய திறைசேரி ஏலவே உள்ள நிதியைக் கொண்டு கொடுப்பனவுகளை உடனடியாக வழங்குமாறு மாகாண சபை அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன் மூலம் இப்பிரச்னைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது . இது தொடர்பில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரிடம் வினவிய போது ‘ நாம் எதிர்வரும் 28ம் திகதி வரை   காலக்கெடு வழங்கியுள்ளோம் , இனியும் நொண்டிச்சாட்டுக்கள் கூறி கால இழுத்தடிப்புக்கள் மேற்கொள்ளப்படுமெனின் ஏலவே திட்டமிட்டபடி தொடர் வேலை நிறுத்தத்தில் நாம் ஈடுபடுவோம்’ எனக் குறிப்பிட்டனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More