Home உலகம் ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகள் விரிவாக்கப்படும் – மஹதிர் மொஹமட்

ஊழல் மோசடிகள் குறித்த விசாரணைகள் விரிவாக்கப்படும் – மஹதிர் மொஹமட்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஊழல் மோசடிகள் குறித்து விசாரணைகள் விரிவாக்கப்படும் என 92 வயதான மலேசிய பிரதமர் மஹதிர் மொஹமட் தெரிவித்துள்ளார். பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டதன் பின்னர் முதல் தடவையாக மஹதிர் மொஹமட் அமைச்சரவைக் கூட்டமொன்றை நடத்தியுள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற அனைத்து விதமான ஊழல் மோசடிகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என மஹதிர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் நாஜீப் ரசாக் மீதே அதிகளவான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின் கடன் சுமையை குறைப்பதாக வாக்குறுதி அளித்தே புதிய பிரதமர் மஹதிர் மொஹமட் ஆட்சி பீடம் ஏறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More