Home இலங்கை கொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது.

கொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை தரமுயர்த்தப்பட்டுள்ளது.

by admin

குளோபல் தமிழ்ச்செய்தியாளர்

முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை வடமாகாண கல்வி அமைச்சரினால் தரமுயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 22.05.2018 அன்று இந்த நிகழ்வு இடம்பெற்றது. மாயபுர என்ற சிங்கள குடியேற்றத்தினால் நாள்தோறும் பல்வேறு அச்சுறுத்தல்களின் மத்தியில் இந்தப்பகுதி மக்கள் வாழ்ந்துவரும் நிலையில் தமது பிள்ளைகளின் மேற்படிப்புக்காக பல குடும்பங்கள் கொக்கிளாய்,கொக்குத்தொடுவாய்,கருநாட்டுக்கோணி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து கடந்த ஆண்டுகளில் வெளியேறியிருந்தனர்.

இவ்வாறான சூழலில் அந்தப்பகுதியில் இருந்து கல்விக்காக இடம்பெயரும் குடும்பங்களை தடுக்கவும் அந்தப்பகுதிகளுக்குவேண்டிய அத்திய அவசியதேவைகளை நிறவேற்றுவதும் அவசியமாகும் என்பதாலும் மேற்குறிப்பிட்ட பாடசாலை 1C தரத்திற்கு தரமுயர்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் 95%அதிகமான மாணவர்கள் சித்தியடைந்து உயர்தரத்திற்கு தெரிவாகியிருந்தனர். உயர் தரத்திற்கு தெரிவாகியிருந்த மாணவர்கள் இப்போது தங்களது சொந்தக் கிராமத்திலேயே தமது உயர்கல்வியை தொடர்கின்றனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More