Home உலகம் ஏமனின் சோகோட்ரா தீவில் அவசர நிலை பிரகடனம்

ஏமனின் சோகோட்ரா தீவில் அவசர நிலை பிரகடனம்

by admin


ஏமனின் சோகோட்ரா தீவில் வெப்பமண்டல புயல் தாக்கியதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.  அரபிக் கடலில் அமைந்துள்ள ஏமனின் ஆளுகைக்குட்பட்ட இந்த சோகோட்ரா தீவில் கடுமையான வெப்பமண்டல புயல் தாக்கியதன் காரணமாக தீவின் பல்வேறு பகுதிகளில் கடுமையான காற்றுடன் கனமழை பெய்துள்ளது.  இதனால் தாழ்வான பகுதிகளில் பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் வீதியோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இதனையடுத்து தாழ்வான பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு உயரமான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 2 படகுகள் மூழ்கியதால் அதில் பயணம் செய்த 17 பேரை காணவில்லை.  மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், தீவு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மழை வெள்ளம் காரணமாக ஊரைவிட்டு வெளியேறி மலைகளில் வசிக்கும் மக்கள் மற்றும் கிராமங்களில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு அவசர உதவி தேவைப்படுவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது

 )

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More