Home உலகம் அயர்லாந்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு

அயர்லாந்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் கருக்கலைப்புக்கு பெரும்பாலான பொதுமக்கள் ஆதரவு

by admin


அயர்லாந்தில் கருக்கலைப்பு தடைச் சட்டத்தில் மாற்றம் செய்வது தொடர்பாக இடம்பெற்ற வாக்கெடுப்பில கருக்கலைப்புக்கு ஆதரவாக பெரும்பாலான பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  அயர்லாந்தில் கருக்கலைப்பு செய்வது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாதநிலையில் அங்கு கருக்கலைப்பு குறித்து கடினமான சட்டம் நடைமுறையில் உள்ளது. கர்ப்பிணித் தாயின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே கருக்கலைப்பு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. கருக்கலைப்பு தண்டனைக்குரிய குற்றம் என்பதால், உரிய நேரத்தில் கருக்கலைப்பு செய்ய முடியாமல், இந்திய வம்சாவளி பல் மருத்துவரான சவிதா என்பவர் 2012ம் ஆண்டு உயிரிழந்திருந்தார்.

இந்தநிலையில் கருக்கலைப்பு சட்டத்தை மறுவரையறை செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் பேரணி நடத்தியதையடுத்து சட்டத்தை மாற்ற அரசு முன்வந்தது. இதன்படி கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்தை திரும்பப் பெறுவது தொடர்பாக, மக்கள் கருத்தினை அறியும் வகையில் நேற்று பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் 6500 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

காலை முதல் மாலை வரை நடைபெற்ற வாக்குப்பதிவில் 60.52 சதவீத வாக்குகள் பதிவாகின. இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கருக்கலைப்புக்கு ஆதரவாக சுமார் 70 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுவாக்கெடுப்பின் முடிவுகள், கடுமையான கருக்கலைப்பு தடைச் சட்டத்தை ரத்து செய்ய வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More