Home உலகம் பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறை தலைவருக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் நடவடிக்கை

பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறை தலைவருக்கு பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் நடவடிக்கை

by admin


பாகிஸ்தானின் முன்னாள் உளவுத்துறை தலைவர் ஆசாத் துரானி நேரில் முன்னிலையாகி அவரது புத்தகம் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.   பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவராக 1990-1992-ம் ஆண்டுகாலப்பகுதியில் கடமையாற்றிய ஆசாத் துரானி உளவு வரலாற்றுக் கூற்று ரோ, ஐ.எஸ்.ஐ. மற்றும் அமைதியின் மாயை என்னும் புத்தகத்தை இந்திய உளவுப் பிரிவான ரோhவின் முன்னாள் தலைவரர் அஸ் துலாத்துடன் இணைந்து எழுதியுள்ளார்.  இந்த புத்தகம் பாகிஸ்தானில் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

எதிரி நாட்டின் உளவுத்துறை அதிகாரி ஒருவருடன் இணைந்து உளவு பார்ப்பது குறித்த தகவல்களை எப்படி புத்தகமாக எழுதி வெளியிடலாம் என பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கருத்துகளை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் ஆசாத் துரானி நேரில் முன்னிலையாகி புத்தகம் தொடர்பான தனது நிலை குறித்து விளக்கம் அளிக்குமாறு அழைப்பாணை அனுப்பியிருந்தநிலையில் அவர் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளித்துள்ளார்.
அவர் ராணுவ நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனினும் அதனை ஆசாத் துரானி மறுத்துள்ள நிலையில் இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என கருதப்படுகிறது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More