குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
சிங்க லே போன்ற இனவாத சக்திகள் தொடர்ந்தும் இயங்கி வருவதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். சிங்க லே, தமி லே, முஸ்லிம் லே போன்ற இனவாத பேய்கள் தொடர்ந்தும் நாட்டில் உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர், நாட்டின் அபிவிருத்திக்கு நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிங்கள, முஸ்லிம், இந்து மற்றும் பர்கர் ஆகிய இன மக்கள் ஒன்றாக வாழக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள மங்கள சமரவீர இனவாத சக்திகள் தொடர்ந்தும் நாட்டில் இயங்கி வருவதாகவும் இவ்வாறான சக்திகளினால் நாட்டை பின்நோக்கி இழுத்துச் செல்ல முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Spread the love
Add Comment