Home இலங்கை நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை…

நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…


யாழ்.நாவாந்துறை பகுதியில் இருந்து நெடுந்தீவு கடற்பகுதியில் மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களை காணவில்லை என யாழ்.காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாவாந்துறையை சேர்ந்த 44 வயதுடைய ஜோன் மல்கன் விமல், 35 வயதுடைய செபமாலை அலெக்ஸ், 30 வயதுடைய மகேந்திரன் ரூபன் ஆகியோரே காணாமல் போயுள்ளனர்,

குறித்த மூன்று மீனவர்களும் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை (26.05.18) மாலை நாவாந்துறையில் இருந்து நெடுந்தீவு கடற்பரப்புக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

அந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீனவர்களில் ஒருவரான ஜோன் தனது மனைவிக்கு , தமது படகின் இயந்திரம் பழுதடைந்துள்ளது என தொலைபேசி ஊடாக அறிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவர்களுடனான தொடர்பு அற்ற நிலையில், உறவினர்களால், கடற்தொழில் நீரியல் வளத் திணைக்களம் மற்றும் யாழ். காவல் லையம் ஆகியவற்றில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை மீனவர்கள் காணாமல் போனமை தொடர்பில் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டதை அடுத்து கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More