Home இலங்கை புதிய ரக அலைபேசிக்கு தாயிடம் பணம் இல்லை – 17 வயது மகன் தற்கொலை…

புதிய ரக அலைபேசிக்கு தாயிடம் பணம் இல்லை – 17 வயது மகன் தற்கொலை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

கடந்த இரண்டு மாதத்திற்குள் நீர்வேலியில் மூவர் தற்கொலை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

புதிய ரக அலைபேசியை வாங்குவதற்கு தாயிடம் பணம் கேட்ட மகனுக்கு, தாயார் பணம் வழங்க மறுத்ததால் மகன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் என கோப்பாய் காவற்துறையினர் தெரிவித்தனர்.

நீர்வேலி தெற்கை சேர்ந்த கிருஷ்ணலிங்கம் என்ற 17 வயதுடைய கோபு எனும், பாடசாலை மாணவனே இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ,

குறித்த மாணவன், கோப்பாய் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வருகின்றார். கடந்த 25 ஆம் திகதி தாயிடம் புதிய ரக அலைபேசி வாங்குவதற்கு பணம் கேட்டுள்ளார். பொருளாதார நிலை காரணமாக தாயார் பணம் இல்லை என கூறியுள்ளார்.

அந்நிலையிலையே மாணவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளான் என தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை நீர்வேலியில் கடந்த இரண்டு மாதத்திற்குள் நீர்வேலி வடக்கு, தெற்கு கரந்தன் வீதியில் அருகருகே வசிக்கும் 3 பேர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More