Home இலங்கை வவுனியா நகரசபை ஊழியர்களின் கண்டனமும் அடையாள வேலை நிறுத்தமும் ….

வவுனியா நகரசபை ஊழியர்களின் கண்டனமும் அடையாள வேலை நிறுத்தமும் ….

by admin

 

வவுனியா நகரசபை ஊழியர்கள் இன்று காலை 8மணியிலிருந்து 10மணிவரையும் அடையாள பணிப்புறக்கணிப்பு ஒன்றுனை மேற்கொண்டனர். கடந்த வாரம் வவுனியா நகரசபை தலைவருக்கு வவுனியா சிறைச்சாலையின் பாதுகாவலரினால் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவே,  இன்று தாம் கண்டனமும் அடையாள வேலை நிறுத்தமும் மேற்கொண்டதாக  நகரசபை ஊழியர்கள் தெரிவித்தனர்.  இந்தப் போராட்டத்திற்கு  ஆதரவாக செட்டிகுளம் பிரதேச, நெடுங்கேணி பிரதேச சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, சிங்கள பிரதேச சபை ஆகியனவும் தமது ஆதரவினை வழங்கியிருந்தன. காலை 8மணியிருந்து 10மணிவரையும் இடம்பெற்ற அடையாள பணிப்பறக்கணிப்பு போராட்டத்தின் இறுதியில் தேசிய அரச பொது ஊழியர் சங்கத்தினரும்  கலந்துகொண்டனர். அடையாள போராட்டத்தினை மேற்கொண்ட பணியாளர்கள் 10மணியளவில் தமது கடமைகளுக்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More