Home இலங்கை வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் மீட்பு…

வவுனியாவில் கடத்தப்பட்ட குழந்தை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பில் மீட்பு…

by admin

2ஆம் இணைப்பு…

வவுனியாவில் கடந்த வியாழனன்று கடத்தப்பட்ட 8 மாத கைக்குழந்தை முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இருந்து காவற்துறையினரால்  மீட்கப்பட்டுள்ளது. குழந்தை கடத்தல் சம்பவம் தொடர்பாக  வவுனியா காவற்துறையினர்  விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில்,  முல்லைத்தீவு  காவற்துறையினர் இன்று மதியம் குழந்தையை மீட்டுள்ளதுடன் குழந்தையை வைத்திருந்த இரு பெண்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இரு பெண்களிடமும் காவற்துறையினர்  தங்களது ஆரம்ப கட்ட விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். குழந்தை மீட்கப்பட்டதைத் தொடர்ந்து முல்லைத்தீவு காவற்துறையினரால்  வவுனியா காவல் நிலையம் ஊடாக குழந்தையின் தாய்க்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் 8 மாத குழந்தை கடத்தல் – லண்டனில் வசிக்கும் தந்தையே காரணம் ?

May 31, 2018 @ 11:09


வவுனியா, குட்செட் வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த இனந்தெரியாத குழுவொன்று, 8 மாத குழந்தையொன்றினைக் கடத்திச் சென்றுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை வான் ஒன்றில் வந்த ஆறுபேர் கொண்ட குழுவினரே இவ்வாறு குழந்தையைக் கடத்திச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசுதரன் வானிஷன் என்ற குழந்தையே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட குழந்தையின் தந்தை லண்டனில் இருப்பதாகவும், தந்தைக்கும் தாய்க்கும் இடையில் உள்ள முரண்பாடு காரணமாக தந்தையே ஆட்களை வைத்து குழந்தையை கடத்தியுள்ளதாக குழந்தையின் தாய் கூறியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More