Home இலங்கை பாலசுப்ரமணியசர்மாவின் சடலம் செங்கலடியில் மீட்பு…

பாலசுப்ரமணியசர்மாவின் சடலம் செங்கலடியில் மீட்பு…

by admin

ஏறாவூர் காற்துறைப் பிரிவு, செங்கலடி மாணிக்கப் பிள்ளையார் கோயில் வீதியை அண்மித்துள்ள வீடொன்றிலிருந்து ஆலய குருக்கள் ஒருவரின் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர். 55 வயதுடைய சுப்பையா பெருமாள் பாலசுப்ரமணியம் சர்மா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 15 வருட காலமாக கொழும்பு – வெள்ளவத்தை ஐஸ்வரி அம்மன் கோவிலில் குருக்களாக கடமையாற்றிய இவர் பின்னர் அங்கிருந்து ஏறாவூர் – மைலம்பாவெளி காமாட்ஷி அம்மன் கோயிலில் இவ்வருடம் பெப்ரவரி 01ஆம் திகதியிலிருந்து ஏப்ரல் 31 வரை குருக்களாக கடமையாற்றியுள்ளார் என்றும் காவற்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கடந்த ஒன்பது வருடங்களுக்கு முன்னர் திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லையெனவும், தனது மனைவியுடன் வாடகை வீடொன்றில் குடியிருந்தார் எனவும் கூறப்படுகிறது.

இதேவேளை இவரது சகோதரி ஒருவர் சிறு நீரகம் செயலிழந்த நிலையில் உடல் உபாதைக்குள்ளாகியுள்ளதால் அதுபற்றிய மன விரக்தியில் சில காலமாக கவலையுடன் காணப்பட்டார் என்றும் உறவினர்கள் காவற்துறை விசாரணைகளில் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் காவற்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More