Home இலங்கை மருத்துவ பீட மாணவர்களின் இணைவுடன் மன்னாரில் 8 ஆவது நாளாக மனித எலும்புக்கூடு அகழ்வு :

மருத்துவ பீட மாணவர்களின் இணைவுடன் மன்னாரில் 8 ஆவது நாளாக மனித எலும்புக்கூடு அகழ்வு :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று (6) புதன் கிழமை 8 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணியை மேற்கோள்வதற்காக யாழ் பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்சி நிலை வைத்திய அதிகாரிகளும் இணைந்து கொண்டுள்ளனர்.

மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று புதன்கிழமை(6) காலை 7.30 மணியளவில் குறித்த அகழ்வு பணிகள் 8 ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.இதன் போது விசேட சட்ட வைத்திய நிபுணர் டபில்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையிலான குழுவினர் களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா தலைமையிலான குழுவினர, விசேட தடவியல் நிபுணத்துவ காவல்துறையினர் , மற்றும் அழைக்கப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் , சட்டத்தரணிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

அண்மைக்காலமாக இடம் பெற்று வந்த அகழ்வு பணிகளில் மனித வளம் குறைவாக காணப்பட்டதை தொடர்ந்க இன்றைய அகழ்வு பணிக்காக யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களும் பயிற்;சி நிலை வைத்திய அதிகாரிகளும் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More