Home இலங்கை வடமாகாண கல்வி அமைச்சரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைக்கிறது :

வடமாகாண கல்வி அமைச்சரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைக்கிறது :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரனுக்கு பயங்கரவாத தடுப்புப்பிரிவு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த ஆண்டு வவுனியா ஈரப்பெரிய குளம் பாடசாலையில் மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வில் வடக்கு மாகாண கல்வி அமைச்சர் இலங்கை தேசியக் கொடியை ஏற்ற மறுத்தார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி இந்த விசாரணை கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்புப்பிரின் தலைமையகத்தில் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கான அழைப்பாணையை பயங்கரவாத தடுப்புப்பிரிவின் யாழ் பிராந்திய அதிகாரிகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சரை நேரில் சென்று அவரது அலுவலகத்தில் வைத்து வழங்கியுள்ளனர்.

அந்த அழைப்பாணையில் எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள போதும் அன்றைய திகதியில் அமைச்சருக்கு வேறு வேலைகள் இருப்பதால் பிறிதொரு திகதியில் தனது முறைப்பாட்டை வழங்க முடியும் என அமைச்சர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைக்கான திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More