Home இந்தியா எழுத்தாளர் கல்புர்கி ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் ஒரே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

எழுத்தாளர் கல்புர்கி ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் ஒரே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்

by admin


கர்நாடக மாநிலத்தில் மதவாதத்துக்கு எதிரான பிரபல எழுத்தாளர் கல்புர்கி, மற்றும் ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் ஆகியோர் ஒரே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கர்நாடக மாநிலம் பெங்களூர் ராஜேஷ்வரி நகரில் வசித்து வந்த 55 வயதுடைய கவுரி லங்கேஷ் பிரபல நாளிதழ்களில் பணியாற்றி வந்ததோடு, வாரப்பத்திரிகை ஒன்றையும் நடத்தி வந்தார். துணிச்சல் மிக்க ஊடகவியலாளர் இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.
இவர் கடந்த செப்ரம்பர் மாதம் இனம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த குழுவினர் நடத்திவரும் விசாரணை தொடர்பான மாநில அரசின் தடயவியல் ஆய்வு அறிக்கையில் கவுரி லங்கேசும், 2015 ஆம் ஆண்டு அன்று படுகொலை செய்யப்பட்ட மதவாதத்துக்கு எதிரான பிரபல எழுத்தாளர் கல்புர்கியும் ஒரே ரகத்தை சேர்ந்த நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இருவருமே 7.65 மில்லிமீட்டர் காலிபர் தோட்டாக்களை பயன்படுத்தி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More