Home இலங்கை முல்லைத்தீவின் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கான நடமாடும் சேவை…

முல்லைத்தீவின் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கான நடமாடும் சேவை…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் காணிப்பிரச்சினைகளுக்கு தீர்வினை காண்பதற்கான ஆளுநரின் நடமாடும் சேவை எதிர்வரும் 14.06.2018 அன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் காலை 9 மணியளவில் நடைபெறவுள்ளது.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் காணி உரிமம் தொடர்பிலான முறைப்பாடுகள் முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து அதிகளவில் ஆளுநர் செயலகத்திற்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காக ஆளுநர் றெஜினோல்ட் குரே நடமாடும் சேவையினை முல்லைத்தீவில் மாவட்ட செயலகத்தில் நடாத்தவுள்ளார்.

ஏற்கனவே மூன்றுமுறை நடமாடும் சேவைகள் நடாத்தப்பட்டு அதிகளவான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ள நிலையில் மேலும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு தீர்வினை காண்பதற்காக நான்காவது தடவையாக எதிர்வரும் 14ம் திகதி ஆளுநர் றெஜினோல்ட் குரே முல்லைத்தீவு மாவட்டத்திற்கு  செல்லவுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More