Home இந்தியா பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் பற்றிய தகவல்களை இந்திய மத்திய அரசு கோரியுள்ளது :

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் பற்றிய தகவல்களை இந்திய மத்திய அரசு கோரியுள்ளது :

by admin

ரஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசு கடிதம் எழுதியிருந்த நிலையில், ஏழு பேர் தொடர்பான தகவல்களை தமிழக அரசை அனுப்பி வைக்குமாறு இந்திய மத்திய அரசு கோரியுள்ளது.

முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ளனர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கடந்த 2016-ம் ஆண்டு 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தது.

இந்நிலையில், சிறை தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரின் உடல் மற்றும் மனநிலை, அவர்களது சிறைத்தண்டனை, குடும்ப சூழல், வழக்கு தொடர்பான ஆவணங்கள் முதலியவற்றை அனுப்பி வைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய மத்திய அரசு இன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More