Home இலங்கை யாழ்ப்பாணத்தின் சில இடங்களில், மக்கள் பிசாசு பயத்தில் உறைந்துள்ளனர்…?

யாழ்ப்பாணத்தின் சில இடங்களில், மக்கள் பிசாசு பயத்தில் உறைந்துள்ளனர்…?

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் உள்ள மக்கள் பிசாசு பயத்தில் உறைந்துள்ளதாக தெரியவருகிறது. இந்த பிசாசு ஒரு கையில் உயிருடன் இரத்தம் வழிந்தோடும் கோழி ஒன்றை கையில் வைத்திருப்பதாகவும் மற்ற கையில் இரத்தம் தோய்ந்து காணப்படுவதாக பிசாசை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர் என தெற்கின் சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

முதலில் இந்த பிசாசை கண்டவர்கள் ஏனையோருக்கு கூறிய போதிலும் அவர்கள் அதனை கவனத்தில் கொள்ளாது கேலி செய்துள்ளனர். எனினும் பிசாசை பார்த்தவர்கள் சில புகைப்படங்களை ஊடகங்களுக்கு வழங்கிய பின்னர், தாமும் அதனை கண்டுள்ளதாக சிலர் கூறியுள்ளனர்.

முகம் ஓரளவுக்கு தெளிவாக காணக் கூடியதாக இருப்பதாகவும் பிசாசு உடல் முழுவதும் வெள்ளை வஸ்திரத்தை அணிந்து இருப்பதாகவும் உயரமான மனிதனை போல் இருப்பதாகவும் யாழ் வாசிகள் கூறியுள்ளனர். அதிகாலை ஒரு மணிக்கு பின்னரே அனைவரும் இந்த பிசாசை கண்டுள்ளனர். முதலில் இந்த பிசாசு கதை தொடர்பாக அஞ்சாமல் இருந்த யாழ் வாசிகள், புகைப்படம் வெளியான பின்னர் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

இதற்கு முன்னர் அமானுஷ்ய சம்பவங்கள் காரணமாக இரவில் யார் கூப்பிட்டாலும் வீட்டு கதவுகளை திறக்காத நிலைமை யாழில் காணப்பட்டதுடன் இரவு நேரங்களில் வெளியில் பயணம் செய்வதையும் மக்கள் தவிர்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More