Home இந்தியா காஷ்மீரில் இந்திய ராணுவம் மனித உரிமைகளை மீறுகிறது – UN – மீறவில்லை – இந்தியா….

காஷ்மீரில் இந்திய ராணுவம் மனித உரிமைகளை மீறுகிறது – UN – மீறவில்லை – இந்தியா….

by admin

2016-ம் ஆண்டு முதல் காஷ்மீரில் இந்திய ராணுவம் அளவுக்கதிகமாக தங்களது வலுவைப் பிரயோகித்து பெருமளவு அப்பாவி பொதுமக்களைக் கொன்றும் காயப்படுத்தியும் கடும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது எனவே  இது குறித்து சர்வதேச  விசாரணை தேவை என ஐநா மனித உரிமைகள் ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியப்பகுதி காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் நிலவரங்கள் குறித்து ஐநா அறிக்கை முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டத்தை பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்தி அமைதி மார்க்கத்தில் போராடும் போராளிகளையும் கைது செய்யும் போக்கை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என்று ஐநாவின் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.

ஐநா மனித உரிமை அமைப்புத் தலைவர் ஸெய்த் ராத் அல் ஹுசைன், ஜூலை 2016க்குப் பிறகு நடந்த அப்பாவி மக்கள் படுகொலைகள் மீது விசாரணை தேவை. பெலட் துப்பாக்கிகள் மூலம் அதிகளவு  மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதோடு, அளவுக்கதிகமாக வலுவை இந்தியா பயன்படுத்தியுள்ளது என்று சாடியுள்ளார். மேலும் காஷ்மீர் நிலரவம். அங்கு நடைபெறும் மனித உரிமைகள் மீறல் நடவைக்கைகள் குறித்து ஒட்டுமொத்த சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்று கோரியுள்ளார்.

காஷ்மீரில் மனித உரிமை மீறலில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது, காரணம் 1990-ம் ஆண்டு சட்டம் அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்குகிறது என்று ஐநா அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ’

ஐநா விசாரணைக் கமிஷன் என்பது ஐநாவின் உயர்மட்ட விசாரணையாகும். பொதுவாக சிரியா போன்ற பலதரப்பட்ட சிக்கல்கள் உள்ள இடங்களுக்குத்தான் ஐநா விசாரணைக் கமிஷன் பொருந்தும்.

பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை வேறுபட்டதாகவும் வேறு அளவிலும் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அமைதியான வழியில் எதிர்ப்பவர்கள் மீது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பிரயோகிக்கப்படுகிறது, இதுவும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஐநா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மறுப்பு…

 ஐ.நா சபை வெளியிட்டுள்ள இந்த அறிக்கைக்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.நா. சபையின் மனித உரிமை மீறல் மீதான அறிக்கை வெளிப்படையான பாரபட்சம் மற்றும் தவறான கதையை உருவாக்கும் முயற்சி ஆகும் என இந்தியா தெரிவித்துள்ளது. குறிப்பாக ஐ.நா.வின் அறிக்கையை இந்தியா நிராகரிக்கிறது. ஐ.நா.வின் அறிக்கை ஏமாற்றும் செயல், முரண்பாடானது. இதுபோன்ற அறிக்கைக்கான உள்நோக்கம் என்னவென்று கேள்வியை எழுப்புவதாக தெரிவித்துள்ள இந்தியா,

ஐ.நா.வின் அறிக்கை இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவது. ஒட்டுமொத்த ஜம்மு காஷ்மீரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். பாகிஸ்தான் இந்தியப் பகுதியை சட்டவிரோதமாகவும், வலுக்கட்டாயமாகவும் ஆக்கிரமித்து உள்ளது. பெரும்பாலும் சரிபார்க்கப்படாத தகவல்கள் தொகுப்பைக் கொண்டு திட்டமிடப்பட்ட பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது என தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More