Home இலங்கை ராஜபக்ஸக்கள் முரண்படுகின்றனரா?

ராஜபக்ஸக்கள் முரண்படுகின்றனரா?

by admin

SLFP 16ஐ ஏற்கவில்லை பேசவும் இல்லை – பசில் – SLFP 16 குழுவுடன் பேசினேன் – கோத்தபாய

இரண்டு பக்கங்களில் கால் வைத்திருப்பவர்களை மக்கள் இனம் காண வேண்டும்.. – 

சட்டச் சிக்கல் இல்லாவிடின் மகிந்தவே ஜனாதிபதி..

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களுடனும் தான் எவ்வித பேச்சுவார்த்தையும் மேற்கொள்ளவில்லை எனவும், அவ்வாறான குழுக்களை ஏற்றுக் கொள்ள தயாரில்லை என்றும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். இன்று (14.08.2008) கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட இரண்டு கட்சிகள் இணைந்து இன்று அரசாங்கம் அமைத்திருப்பதாக கூறியுள்ள அவர், சட்ட சிக்கல் இல்லை என்றால் 2020ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது மக்கள் எதிர்பார்க்கும் தலைவரான மஹிந்த ராஜபக்ஷவே என்றும் அவ்வாறில்லாவிட்டால் மஹிந்த ராஜபக்ஷவால் கூறப்படும் நபருக்கு ஆதரவளிப்பதாகவும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இரண்டு பக்கங்களிலும் கால் வைத்திருக்கும் நபர்கள் சம்பந்தமாக மக்கள் எதிர்காலத்தில் தீர்மானமொன்றை எடுக்க வேண்டும் என்றும் பசில் ராஜபக்ஷ கூறியுள்ளார். இதேவேளை சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் 16 பேர் கொண்ட குழுவை கோத்தபாய ராஜபக்ஸ நேற்று சந்தித்தார் என செய்திகள் வெளியாகி இருந்தன. எனினும் இவ்வாறான குழுவை தான் ஏற்கத் தயார் இல்லை எனக் கூறியுள்ளார். ஆயின் ராஜபக்ஸ சகோதரர்கள் முரண்படுகிறார்களா? என்ற கேள்விகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது..

SLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More