Home இலங்கை ஞானசாரருக்கு வழங்கிய தீர்ப்பால் சந்தியா எக்னெலிகொடவுக்கு திருப்தி…

ஞானசாரருக்கு வழங்கிய தீர்ப்பால் சந்தியா எக்னெலிகொடவுக்கு திருப்தி…

by admin


குடிமக்களின் கடமை சட்டத்தை வலுப்படுத்துவதாகவும் அந்த வகையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை குறித்து தாம் திருப்தி அடைவதாக, சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

காணாமலாக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா என்னெலிகொடவை, ஹோமாகம நீதிமன்றில் வைத்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நேற்று (14.06.18) வழங்கப்பட்டதன் பின்னரே சந்தியா எக்னெலிகொட இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நேற்று நீதிமன்ற வளாகத்திலிலுந்து வெலிக்கடை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவரை நீதிமன்ற வளாகத்திலிருந்து சிறைச்சாலை பஸ்ஸில் ஏற்றும்போது, அவ்வளாகத்திலிருந்த பிக்குமார்கள் சிலர், அருகிலிருந்த அரச மரத்துக்கருகில் சென்று, பிரித் (பௌத்தமத ஸ்தோத்திரங்கள்) ஓதி, ஞானசார தேரவை வழியனுப்பி வைத்தனர்.

Spread the love
 
 
      

Related Articles

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.