Home இலங்கை அர்ஜுன் அலோஸியசிடம் பணம் பெறவில்லை – சத்தியக் கடிதம் வழங்கவும் தயார்

அர்ஜுன் அலோஸியசிடம் பணம் பெறவில்லை – சத்தியக் கடிதம் வழங்கவும் தயார்

by admin


பர்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோஸியசிடம் தான் பணம் பெற்றுக்கொள்ளவில்லை என சத்தியக் கடிதம் வழங்கத் தயார் என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.திவுலப்பிட்டிய பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

எனினும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ உட்பட அவரது அணியில் இருந்த அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தாம் எந்த ஒரு மோசடியையோ அல்லது ஊழலையோ செய்யவில்லை என சத்தியக் கடிதத்தை வழங்க வேண்டும் எனவும் அவர்கள் அவ்வாறு வழங்கினால் தானும் வழங்க தயாராக இருப்பதாக ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More