Home இலங்கை முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டம் நிறைவு

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்களின் போராட்டம் நிறைவு

by admin

முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்னெடுத்த போராட்டம் முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி கேதீஸ்வரன் வழங்கிய உறுதி மொழியை அடுத்து நிறைவுக்கு வந்துள்ளது. இன்று மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்திய பேருந்து உரிமையாளர்கள் சாரதிகள், நடத்துனர்களை சந்தித்த முதலமைச்சர் அமைச்சின் செயலாளர் உங்களது பிரச்சினைகளை விளங்கி கொண்டுள்ளோம் எனவும் தமக்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கி பொது மக்களின் நலன் கருதி சேவைகளை முன்னெடுக்குமாறும் வழங்கிய உறுதிமொழியினையடுத்து இன்று (17) கைவிடப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து குறித்த உறுதி மொழிக்கு அமைய போராட்டம் நிறுத்தப்பட்டதாகவும் தமது சேவைகள் நாளை முதல் வழமை போன்று இடம்பெறும் எனவும் முல்லைத்தீவு மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் தெரிவித்துள்ளார் . உறுதிவழங்கியபடி இரண்டு வாரங்களுள் தீர்வு கிடைக்கவில்லையெனில் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More