Home இலங்கை அனுபவத்தை மறந்து போனவர்கள், மீண்டும் சர்வாதிகார ஆட்சியை கோருகின்றனர்…

அனுபவத்தை மறந்து போனவர்கள், மீண்டும் சர்வாதிகார ஆட்சியை கோருகின்றனர்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

நாட்டுக்குள் உருவாகி வந்த சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகவே கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நாட்டு மக்கள் மாற்றம் ஒன்றுக்கு பங்களிப்பு வழங்கியதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அந்த அனுபவத்தை மறந்து போனவர்கள் நாட்டில் மீண்டும் சர்வாதிகார ஆட்சியை கோருகின்றனர். எனினும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நாட்டு மக்கள் முன்வைத்த எதிர்பார்ப்பை சீர்குலைக்க இடமளிக்க போவதில்லை எனவும்ஜனாதிபதி கூறியுள்ளார். குருணாகல் நிக்கவரெட்டிய பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

சர்வாதிகார ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து மக்கள் கோரிய சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் 100 வீதம் அல்ல 200 வீதம் நாட்டிற்குள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய அரசாங்கத்தை வலுவற்ற அரசாங்கம் என சிலர் கூறுகின்ற போதிலும் இது சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்துடன் செல்லும் பயணம் என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். கிடைத்துள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை சிலர் தவறாக பயன்படுத்தி அரசாங்கத்தின் மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர். எனினும் நாட்டின் கல்வி கற்றவர்கள், புத்திசாலிகள், ஜனநாயகத்தை மதிக்கும் சகலரையும் இணைந்து கொண்டுநாட்டுக்கு தேவையான சரியான அரசியல் மற்றும் அபிவிருத்தி பயணத்தை உறுதிப்படுத்தி முன்னோக்கி செல்வோம். கடந்த மூன்று ஆண்டுகளில் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் காரணமாக எமது நாட்டை விட்டு தூர விலகியிருந்த சர்வதேசத்தை நாட்டுக்கு நெருக்கமானதாக மாற்ற முடிந்துள்ளது. நாடு பெற்றுள்ள வெற்றியை மீண்டும் திசை திருப்ப எவருக்கும் பங்களிப்பு வழங்கக் கூடாது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More