Home இந்தியா ஹெலிகொப்டர் பேர ஊழல் வழக்கில் இடைத்தரகரை ஒப்படைக்க இத்தாலி மறுப்பு

ஹெலிகொப்டர் பேர ஊழல் வழக்கில் இடைத்தரகரை ஒப்படைக்க இத்தாலி மறுப்பு

by admin

ஹெலிகொப்டர் பேர ஊழல் வழக்கில் தொடர்புடைய இடைத்தரகரை ஒப்படைக்க இத்தாலி மறுப்பு தெரிவித்துள்ளதால் அவரை நாடு கடத்த மத்திய வெளியுறவு அமைச்சினை சி.பி.ஐ. அணுகி உள்ளது. கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில், மிக முக்கிய பிரமுகர்களின் பயன்பாட்டுக்காக 12 ஹெலிகொப்டர்கள் வாங்க இங்கிலாந்தை சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லாண்ட் நிறுவனத்துடன் 3,600 கோடி ரூபாக்கு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. இந்த பேரத்தை செய்து முடிப்பதற்காக, 423 கோடி ரூபா லஞ்சம் கைமாறியதாக வெளியான தகவலையடுத்து, குறித்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இந்த லஞ்ச விவகாரம் குறித்து சி.பி.ஐ.யும், அமுலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்ட 3 பேரில் ஒருவரான இத்தாலியை சேர்ந்த 71 வயதான கர்லோ கெரோசா என்பவரை கைது செய்ய சர்வதேச காவல்துறை மூலம் சிப்பு ஆணை பிறப்பிக்கப்பட்டதன்பேரில், இத்தாலிக் காவல்துறையினர் ; கர்லோ கெரோசாவை கைது செய்துள்ளனர்.

அவரிடம் விசாரணை நடத்துவது அவசியம் என்பதால், அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு சி.பி.ஐ. வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் இத்தாலி அதனை நிராகரித்துள்ளது. இந்தநிலையில் வேறு விதிமுறைகளின் கீழ், கெரோசாவை நாடு கடத்த மத்திய வெளியுறவு அமைச்சினை சி.பி.ஐ. அணுகி உள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More