Home சினிமா சர்ச்சைகள் முரண்பாடுகளை கடந்து மீண்டும் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வருகிறார்!

சர்ச்சைகள் முரண்பாடுகளை கடந்து மீண்டும் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி வருகிறார்!

by admin


இம்சை அரசன் படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்க வடிவேலு மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில், தனது முடிவை மாற்றிக் கொண்டு விரைவில் அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.  ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. சிம்புத்தேவன் இயக்கிய இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24ஆம் புலிகேசி என்ற பெயரில் தயாரிக்க ஷங்கர் திட்டமிட்டு அதில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்துகொண்டார்.

இந்த படத்துக்காக சென்னை அருகே சுமார் ரூ.7 கோடி செலவில் அரங்கு அமைத்து படப்பிடிப்பை சிம்புத்தேவன் தொடங்கினார். ஆனால் திரைக்கதையில் தலையிடுவதாகவும், படக்குழுவினர் கொடுத்த உடைகளை அணிய மறுப்பதாகவும் வடிவேலு மீது குற்றம் சுமத்தப்பட்டது. இயக்குனர் சிம்புத்தேவனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படப்பிடிப்புக்கு செல்வதை வடிவேலு நிறுத்திக்கொண்டார்.

இதனால் வடிவேலு மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இயக்குனர் ஷங்கர் முறைப்பாடு ஒன்றையும் அளித்திருந்தார்.  நடிகர் சங்கம் கடிதம் அனுப்பி வடிவேலுவிடம் விளக்கம் கேட்டது. பின்னர் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த இறுதி முடிவில் வடிவேலு ஒன்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள வேண்டும் அல்லது, அரங்கு அமைக்க ஆன செலவு, அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் என வட்டியுடன் மொத்தமாக ரூ.9 கோடியை வடிவேலு திரும்ப கொடுக்க வேண்டும் என்றும் கெடு விதித்தது.

இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ள வடிவேலு முடிவு செய்திருப்பதாக தக

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More