Home இலங்கை இஸ்ரேல் பிரேரணைகள் அளவிற்கு, இலங்கைப் பிரேனைகள் அமெரிக்காவுக்கு முக்கியமல்ல…

இஸ்ரேல் பிரேரணைகள் அளவிற்கு, இலங்கைப் பிரேனைகள் அமெரிக்காவுக்கு முக்கியமல்ல…

by admin

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவைக்கு இலங்கை அளித்தவாக்குறுதிகள் நிறைவேற்றப்படுவதை அமெரிக்கா உறுதிசெய்யும் என இலங்கையின் ஐநாவிற்கான முன்னாள் இராஜதந்திரி ஜயந்த தனபால தெரிவித்துள்ளார்.

.அமெரிக்கா தனது நேசநாடுகள் ஊடாக இதற்கான அழுத்தத்தை தொடர்ந்தும் கொடுக்கும் எனவும், ஐக்கியநாடுகளின் உறுப்பு நாடு என்ற வகையில் அந்த தீர்மானத்தை நிறைவேற்றவேண்டிய கடப்பாடு இலங்கைக்கு உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் முன்னையை குடியரசுகட்சி அரசாங்கத்திற்கும்; ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையுடன் பிரச்சினைகள் காணப்பட்டன அவர்கள் அதிலிருந்து விலகி பின்னர் மீண்டும் இணைந்து கொண்டனர் என ஜயந்த தனபால தெரிவித்துள்ளார்.

இதேவேளை இஸ்ரேல் தொடர்பான பிரேரணைகளே அமெரிக்காவிற்கு பிரச்சினை என சுட்டிக்காட்டிய அவர் இலங்கை போன்ற நாடுகள் குறித்த பிரேரணைகள் பிரச்சினையில்லை என ஜயந்த தனபால குறிப்பட்டு உள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More