Home உலகம் 5 நாடுகளின் மக்கள், அமெரிக்காவுக்குள் நுழைய, உச்ச நீதிமன்றமும் தடை விதித்தது..

5 நாடுகளின் மக்கள், அமெரிக்காவுக்குள் நுழைய, உச்ச நீதிமன்றமும் தடை விதித்தது..

by admin

சிரியா, ஈரான் உள்ளிட்ட 5 நாட்டு மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த தடை உத்தரவுக்கு ஆதரவாக அந்நாட்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டிரம்ப் சிரியா, ஈரான், சோமாலியா, ஏமன், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து அறிவித்திருந்தார். நாட்டின் பாதுகாப்பு கருதி  இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ந்த பயணத்தடை உலகம் பல்வேறு வகையில் விமர்சிக்கப்பட்ட நிலையில், வர்த்தகம் மற்றும் கல்வி நடவடிக்களுக்காக வருபவர்களையும் அமெரிக்காவில் இருக்கும் குறித்த நாடுகளின் மிக நெருக்கமான உறவினர்களையும் அனுமதிக்கலாம் ; பயணத்தடையில் சிறிய மாற்றம் செய்யப்பட்டது.

மேலும் வடகொரியா, வெனிசுலா மற்றும் ஆபிரிக்காவில் உள்ள சாத் ஆகிய நாடுகளும் இப்பட்டியலில் பின்னர் இணைக்கப்பட்டன. டிரம்ப்பின் இந்த உத்தரவுக்கு எதிராக பல மாகாண நீதிமன்ங்களில் வழக்கு தொடரப்பட்டதனையடுத்து, இந்த பயணத்தடை அறிவிப்புக்கு இடைக்கால தடை பிறப்பிக்கப்பட்டது. பின்னர், இப்பட்டியலில் இருந்து சூடான், ஈராக் நாடுகள் விலக்கப்பட்டு இந்நாடுகளில் இருந்து வருபவர்கள் மீது கூடுதல் கண்காணிப்பு மட்டும் போதும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அந்நாட்டு அரசு உச்சநீதிமன்றில் மேல்முறையீடு செய்த நிலையில், இந்த தடையை விலக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  இந்தநிலையில் உச்சநீதிமன்றின் இந்த தீர்ப்புக்கு எதிராக பல அமைப்புகள் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், டிரம்ப்பின் பயணத்தடை சரியே என இன்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More