Home உலகம் பிரித்தானியாவின் மன்செஸ்டர் மூர்லாண்ட் தீ, 34 வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்…

பிரித்தானியாவின் மன்செஸ்டர் மூர்லாண்ட் தீ, 34 வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்…

by admin

பிரித்தானியாவின் மன்செஸ்டர் பகுதியிலுள்ள சற்றில்வேர்த் மூர் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக சுமார் 34 வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கு கிழமை இரவு பரவத் தொடங்கிய இந்தக் காட்டுத்தீயானது வெப்பமான காலநிலை காரணமாக தொடர்ந்தும் பல பகுதிகளுக்கும் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்புரூக் பகுதியிலுள்ள 34 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனினும் அங்கு வசித்தமக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் ஏற்படவில்லை என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்தும் தீ பரவி வருவதுடன் காட்டுத்தீ புகை 20 மைல் மைல் தூரத்திற்கு பரவியுள்ளதாகவும் தீயிணை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் உதவிக்கு நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 

Thirty-four homes in Carrbrook, near Stalybridge, were evacuated but there are no reported injuries.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More