Home இலங்கை இலங்கைப் பெண்ணின் கணவரும் இருபிள்ளைகளும் தமிழ்நாட்டில் சடலமாக மீட்பு

இலங்கைப் பெண்ணின் கணவரும் இருபிள்ளைகளும் தமிழ்நாட்டில் சடலமாக மீட்பு

by admin


தமிழ்நாட்டின் சென்னை மதுரவாயல் பிரதேசத்தில் இருந்து இலங்கைப்பெண்ணொருவரின் கணவரும் இரு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில், 38 வயதுடைய ஹபீப்ரஹ்மான் எனப்படும் தந்தையும் அவரது 4 வயது மற்றும் 6 வயதுடைய பிள்ளைகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து தூ;நாற்றம் வீசியதை தொடர்ந்து வீட்டை உடைத்து திறந்து பார்த்தவேளை அவர்கள் மூவரும் உஒயிரிழந்நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூவரும் தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள அதிகாரிகள் ஹபீப்ரஹ்மான் அவரது மனைவியை பிரிந்துவாழ்ந்துள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். காரைக்குடியை சேர்ந்த ஹபீப்ரஹ்மான் இலங்கையை சேர்ந்த நிசாபாத்திமா என்ற பெண்ணை திருமணம் செய்தவர் எனவும் அவரது மனைவி இரண்டு வருடங்களிற்கு முன்னர் அவரையும் பிள்ளைகளையும் விட்டுவிட்டு இலங்கை சென்றுவிட்டார் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் சென்னை சென்றிருந்த அவரது மனைவி அவரை பார்க்கவில்லை என்பதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார் என அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More