Home இலங்கை “சம்பந்தரை தூக்குவதும் மகிந்தரை இருத்துவதுமே எமது பிரதான இலக்கு”….

“சம்பந்தரை தூக்குவதும் மகிந்தரை இருத்துவதுமே எமது பிரதான இலக்கு”….

by admin

பிர­தான எதிர்க்­கட்சி அந்­தஸ்தை தம் வசப்­ப­டுத்தி ஆட்சியைக் கைப்­பற்றுவதும், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க் கட்சித் தலை­வ­ராக்­கு­வதுமே தமது பிர­தான இலக்காகும்  என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடு­கையில்,

மக்கள் விடுதலை முன்னணியினால் கொண்டுவரப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கம் உள்ளது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கவும் நாட்டைத் துண்டாடவும் மக்கள் விடுதலை முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும்  முன்னெடுக்கும் நோக்கங்கள் எமக்கு நன்றாகவே தெரிகின்றன. எனவே நாட்டைக் காப்பாற்ற வேண்­டிய தேவை எமக்குள்­ளது.

கடந்த ஜன­தி­பதித் தேர்­தலின்  பின்னர் ஆட்­சிக்கு வந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிறை­வேற்று ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களைக் குறைத்­துள்ளார். பாரா­ளு­மன்­றத்­துக்கு அதிகாரங்களை வழங்­கி­யுள்ளார். ஆகவே இது போது­மா­னது. இன்று தேசிய பாது­காப்பு விட­யத்தில் பாரிய அச்­சு­றுத்தல் உள்­ளது.

வடக்கில் மீண்டும் பயங்­க­ர­வாதம் தலை­தூக்கும் சூழல் உள்­ளது. வடக்கு முதல்வர் நாட்­டைத் துண்­டாடும் நோக்­கத்தில் செயற்­பட்டு வரு­கிறார். சிவா­ஜி­லிங்கம் போன்றவர்கள்  பிரிவினைவாதக்  கொள்­கையில் செயற்­பட்டு வரு­கின்­றனர். காவற்துறை அதி­கா­ரங்கள், காணி அதி­கா­ரங்­களை கேட்­டுக்­கொண்டு  அவர்கள் வடக்கில் மீண்டும் தனி ராஜ்ஜி­ய­மாக செயற்­பட முயற்­சித்து வரு­கின்­றனர். இந்­ நி­லையில் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மையை நீக்கும் நோக்­கங்கள் மூல­மாக விடுதலைப் புலிகளின்  இலக்கு என்­னவோ அது அர­சாங்­கத்தின் மூல­மா­கவே நிறை­வேற்­றப்­படும். ஆகவே 20 ஆவது திருத்தச் சட்­டத்தை தோற்­க­டிப்­பது குறித்து சகல தரப்புகளுடனும்   பேச்­சு­வார்த்­தை­கள் முன்­னெ­டுக்கப்பட்டுள்ளது.

பாரா­ளு­மன்­றத்தின் பிர­தான எதிர்க்­கட்சி ஆச­னத்தை  கைப்­பற்ற வேண்டும். அது பிரதான இலக்கு.  குறிப்­பாக இந்த அர­சாங்­கத்தின் ஆட்சி முடி­வுக்கு வரும் வரையில் பாரா­ளு­மன்­றத்தில்பிரதான  எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மஹிந்த ராஜபக்ஷவைக் கொண்­டு­வர வேண்டும். அதற்­கான சூழலை  உரு­வாக்­கு­வது குறித்தும் சிந்திக்கப்படுகிறது. இப்­போது அர­சாங்­கத்தில் இருந்து பலர் வெளி­யேறி எதிர்க்­கட்­சிக்கு  மாறி­யுள்­ளனர். ஆகவே இப்­போது கூட்டு எதிர்க்­கட்சி பிர­தான எதிர்க்­கட்­சி­யாக மாற்றம் பெற்­றுள்­ளது. எனவே மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக மாற்றும் நகர்­வு­களை நாம் முன்­னெ­டுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More